ஆம் ஆத்மி கட்சிக்கு அச்சப்பட்டே பாஜக அரசு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதாக தில்லி முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள செளகானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 75வது ஹிமாச்சல் தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் கிராமப்புற மக்களுக்கு குடிநீர் கட்டணத்திலிருந்து விலக்கு, 125 யூனிட் மின்சார நுகர்வோருக்கு மின்கட்டணம் ரத்து, மகளிருக்கு 50 சதவிகித பேருந்து கட்டண சலுகை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிக்க | ஹிமாச்சல அரசு பேருந்தில் மகளிருக்கு 50% கட்டண சலுகை
நடப்பாண்டு இறுதியில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசின் அறிவிப்புகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ”மக்களுக்கு எந்த வசதியையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. ஆம் ஆத்மிக்கு அச்சப்பட்டு அரவிந்த் கெஜரிவாலின் திட்டங்களை பாஜக காப்பியெடுத்துள்ளது” என விமர்சித்தார்.
இதையும் படிக்க | கா்நாடக அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜிநாமா
ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.