புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
புனித வெள்ளி பண்டிகையையொட்டு நாடு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் புனித வெள்ளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனித வெள்ளியான இன்று இயேசு கிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தையும் நாம் நினைவுகூர்வோம். அவரின் கொள்கைகளான சேவை மற்றும் சகோதரத்துவமும், அவரது லட்சியங்கள் ஏராளமான மக்களுக்கு வழிகாட்டும் விளக்காகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்