ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மகாராஷ்டிரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: உயிரைப் பணயம் வைத்து நீர் எடுக்கும் பெண்கள்

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பத்தில் தத்தளித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் பெண்கள் தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 8:05 am

DIN

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பத்தில் தத்தளித்து வரும் நிலையில், மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் பெண்கள் தண்ணீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாசிக்கில் உள்ள ரோஹிலே கிராமத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. உயிரைப் பணயம் வைத்து பெண்கள் தண்ணீர் எடுக்கக் கிணற்றில் இறங்குகின்றனர். 

அதில் ஒரு பெண்மணி கூறுகையில், 

கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க பெண்கள் 2 கி.மீட்டர் தூரத்திலிருந்து வருகிறார்கள். தண்ணீர் பற்றாக்குறையால் கிணற்றுக்குள் இறங்கி நீர் எடுக்க வேண்டியுள்ளது. 

மாணவி ஒருவர் கூறுகையில், 

நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் தண்ணீர் இல்லை. தண்ணீர் எடுக்கத் தொலைதூர கிராமத்திற்குச் செல்கிறோம். சில சமயங்களில் குடும்பத்திற்கு தண்ணீர் எடுக்க வகுப்புகளைப் புறக்கணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தேர்வுக்குக் கூட தாமதமாகிறது என்றார். 

இருப்பினும் அதிகாரி ஒருவர் கூறுகையில், குறைந்தபட்சம் ஜூன் வரை தண்ணீர் பற்றாக்குறைக்கான வாய்ப்புகள் இல்லை என்றார். 

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வரும் புள்ளி விவரங்களின்படி, 

தனித்தனியாகக் குடிநீர் வைக்கிறோம். பாசனத்துக்கு தண்ணீர் ஒதுக்குகிறோம். அதனால், குறைந்தது ஜூன் வரை தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.