சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 216 பேர் கைது

ஒடிசாவில் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

News image
Updated On :18 ஏப்ரல் 2022, 7:03 am

DIN

ஒடிசாவில் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

போக்குவரத்துத் துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து நடத்திய சோதனையில், கைது செய்யப்பட்ட 138 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை இரவு மாநிலம் முழுவதும் 2,600 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில், 251 பேர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டது. கட்டாக்கில் 59 பேரும், சுபர்னாபூர் மாவட்டத்தில் 17 பேரும் என மொத்தம் 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இருப்பினும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மாநிலத்தில் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. கடந்த 2020-ம் ஆண்டில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதால் 648 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 298 பேர் உயிரிழந்துள்ளனர். 

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், முதல்முறை தவறு செய்பவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது முறையாக, 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் மதுபோதையில் சிக்கினால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 15,000 அபராதம் விதிக்கப்படும். 

தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, கரோனாவுக்கு பிறகு, ஆல்கஹால் பரிசோதனை செய்வதை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். தற்போது கரோனா எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக சிறப்பு இயக்கத்தை நடத்தத் தொடங்கியுள்ளனர், என்று அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.