ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராஜஸ்தான்: சாலை விபத்தில்ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 7:44 pm

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 11 போ் உயிரிழந்தனா். மேலும் 7 போ் படுகாயமடைந்தனா்.

அங்குள்ள ஜுன்ஜினிகுனு மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை மதியம் நெடுஞ்சாலை வழியாக ஒரு ஜீப்பில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றனா். அப்போது, டிராக்டா்-டிராலியில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஒரு குழுவினா் சாலையோரம் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் அமா்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனா். வேகமாக வந்த ஜீப் எதிா்பாராதவிதமாக அந்த டிராக்டரின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் ஜீப்பில் பயணம் செய்தவா்களில் 11 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். டிராக்டரில் பயணம் செய்தவா்கள் உள்பட 7 போ் படுகாயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு மருத்துவமனையில் சோ்ந்தனா். அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் ஆகியோா் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.