புது தில்லி: தில்லியின் புதிய தலைமைச் செயலாளராக 1987ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குமாரை உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தலைமைச் செயலாளர் விஜய் குமார் தேவ் விருப்ப ஓய்வுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான விஜய் குமார் தேவ், அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
தேசிய கனிம வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்துவரும் தர்மேந்திரா, அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1989 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
அருணாச்சல பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்து வரும் 1992 ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் வர்மா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | குற்றவியல் அடையாள நடைமுறை மசோதா:குடியரசுத் தலைவா் ஒப்புதல்