ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சோனியா காந்தி - பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் 4வது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 8:36 am

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் 4வது முறையாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வியூக நிபுணரும் ஐ-பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கான ஆய்வறிக்கையை கடந்த வாரத்தில் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்தார்.

இந்த ஆய்வறிக்கையில், காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டிய மாநிலங்கள், கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

கடந்த 4 நாள்களில் மூன்று முறை சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்திய நிலையில், தில்லியில் இன்று 4வது முறையாக சந்தித்து பேசி வருகிறார்.

இந்த சந்திப்பில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.