அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

அரசு மரியாதையுடன் பிரிட்டன் பிரதமரை வரவேற்ற பிரதமர் மோடி

இந்தியா வருகை தந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அரசு மரியாதை அளித்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். 

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 5:12 am

DIN

இந்தியா வருகை தந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அரசு மரியாதை அளித்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். 

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று குஜராத்தின் ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். 

தொடர்ந்து இன்று தில்லி சென்ற அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சனும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.  

அதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன், தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். போரிஸ் ஜான்சனுக்கு மார்பளவு காந்தி சிலை பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்தியா -பிரிட்டன் இடையேயான நல்லுறவு, வணிகம் உள்ளிட்டவை குறித்து அவர் பிரதமர் மோடியுடன் பேசவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.