ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 மடங்கு உயர்வு

தலைநகர் தில்லியில் கரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

News image

தில்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 மடங்கு உயர்வு

Updated On :25 ஏப்ரல் 2022, 12:08 pm


புது தில்லி: தலைநகர் தில்லியில் கரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 11ஆம் தேதி 447 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இது ஏப்ரல் 24ஆம் தேதி 2,812 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் 17லிருந்து 80 ஆக அதிகரித்துள்ளது. 

தில்லியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துவந்த போதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கைக் குறைவாகவே இருப்பதால் கவலைகொள்ளத் தேவையில்லை என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 11ஆம் தேதி கரோனா  நோயாளிகள் எண்ணிக்கை 601 ஆக இருந்த நிலையில், அது தற்போது 3,975 ஆகே அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.