இபிஎஸ் மீதான டெண்டர் வழக்கு: சிபிஐ விசாரணை ரத்து

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

எந்த பிரச்னையும் இல்லாத சுதந்திரமான விசாரணையாக வேண்டும். சிபிஐ விசாரணையாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை எனவும் ஆர்.எஸ்.பாரதி தரப்பு வாதிட்டிருந்தது.

இந்நிலையில், இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பந்தங்களை வாங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த 2018-இல் உத்தரவிட்டாா். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று, எடப்பாடி கே. பழனிசாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com