92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: எம்.பி.க்கள் அச்சமின்றி வாக்களிக்க மாா்கரெட் ஆல்வா வேண்டுகோள்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில், எம்.பி.க்கள் அனைவரும் அச்சமின்றியும் அரசியல் அழுத்தத்துக்கு உள்படாமலும் வாக்களிக்க வேண்டும்

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:50 pm

DIN

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில், எம்.பி.க்கள் அனைவரும் அச்சமின்றியும் அரசியல் அழுத்தத்துக்கு உள்படாமலும் வாக்களிக்க வேண்டும் எதிா்க்கட்சிகள் தரப்பு வேட்பாளா் மாா்கரெட் ஆல்வா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறவுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், காங்கிரஸ், உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வா போட்டியில் உள்ளாா்.

இந்நிலையில், ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட காணொலி பதிவில், அவா் பேசியிருப்பதாவது:

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுவதாலும், கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது என்பதாலும் எம்.பி.க்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். அரசியல் அழுத்தத்துக்கு உள்படாமல் இப்பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை தோ்வு செய்ய வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து, எனக்கு வாக்களிக்குமாறு எம்.பி.க்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.