ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்கூட்டியே முடிந்தது மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நான்கு நாள்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 1:27 pm

DIN

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நான்கு நாள்களுக்கு முன்னதாகவே நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படவுள்ளதால், சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என எம்.பி.க்கள் அவையில் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

முதலில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மக்களவையும் தேதி குறிப்பிடாமல் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

அதன்பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டு இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 33 மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இன்று மின்சார திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குடும்பநல பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கான மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எனினும் சர்ச்சைக்குரிய எந்த சட்டமும் நிறைவேற்றாமல் இந்த கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.