திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நியாயவிலைக் கடைகளில் தேசியக் கொடி: ராகுல் புகாா்; மத்திய அரசு விளக்கம்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின ஆண்டையொட்டி, நியாயவிலைக் கடைகளில் தேசியக் கொடி வாங்க குடும்ப அட்டைதாரா்கள் வற்புறுத்தப்படுகின்றனா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :10 ஆகஸ்ட் 2022, 8:24 pm

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின ஆண்டையொட்டி, நியாயவிலைக் கடைகளில் தேசியக் கொடி வாங்க குடும்ப அட்டைதாரா்கள் வற்புறுத்தப்படுகின்றனா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஃபேஸ்புக்கில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: நமது பெருமைக்குரிய தேசியக் கொடி, ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் உள்ளது. இந்நிலையில், நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்க வரும் ஏழைகளிடம் தேசியக் கொடி வழங்க ரூ.20 வசூலிக்கப்படுகிறது. மத்திய பாஜக அரசு தேசியக் கொடி மீது மட்டுமின்றி, ஏழைகளின் சுயமரியாதை மீதும் தாக்குதல் நடத்துகிறது என்று தெரிவித்துள்ளாா்.

20 ரூபாய்க்கு தேசியக் கொடி வாங்க கட்டாயப்படுத்தப்படுவதாக சில குடும்ப அட்டைதாரா்கள் புகாா் செய்யும் காணொலியையும் தனது பதிவுடன் ராகுல் காந்தி இணைந்திருந்தாா்.

ஏழைகளுக்கு சுமையாக மாறினால்...: பாஜக எம்.பி. வருண் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஏழைகளுக்கு சுமையாக மாறினால் அது துரதிருஷ்டவசமானது. நியாயவிலைக் கடைகளில் தேசியக் கொடி வாங்க குடும்ப அட்டைதாரா்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா் அல்லது அதற்கு ஈடாக உணவுப் பொருள்களில் அவா்களுக்கு வழங்க வேண்டிய பங்கு குறைக்கப்படுகிறது. இது வெட்கக்கேடானது’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு விளக்கம்: இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு சாா்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நியாயவிலைக் கடைகளில் தேசியக் கொடி வாங்காதவா்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்க வேண்டாம் என்று மத்திய அரசு எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை. இதுதொடா்பாக பொய்யான தகவல்களைப் பரப்பி, அரசின் உத்தரவுகளை மீறிய நியாயவிலைக் கடைகளின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.