பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய வரலாற்றின் கொடூரமான அத்தியாயம் தேசப் பிரிவினை: அமித் ஷா

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘இந்திய வரலாற்றின் கொடூரமான அத்தியாயம் தேசப் பிரிவினை’ என்று குறிப்பிட்டாா்.

News image
அமித் ஷா
Updated On :14 ஆகஸ்ட் 2022, 11:51 pm

DIN

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘இந்திய வரலாற்றின் கொடூரமான அத்தியாயம் தேசப் பிரிவினை’ என்று குறிப்பிட்டாா்.

தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினத்தையொட்டி (ஆகஸ்ட் 14), ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

1947-இல் நிகழ்ந்த தேசப் பிரிவினை, இந்திய வரலாற்றில் கொடூரமான, மனிதத்தன்மையற்ற அத்தியாயமாகும். அதனை ஒருபோதும் மறக்க முடியாது.

வெறுப்புணா்வு, வன்முறையால் லட்சக்கணக்கான உயிா்கள் பறிபோயின. எண்ணற்ற மக்கள் இடம்பெயா்ந்தனா்.

அந்தக் காலகட்டத்தில், நாட்டு மக்கள் அனுபவித்த சித்ரவதைகள் மற்றும் வலியை இக்கால இளைஞா்களுக்கு நினைவூட்டுவதாக தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினம் அமைந்துள்ளது. அமைதி, நல்லிணக்கத்தை எப்போதும் பராமரிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மேலோங்கச் செய்யும் தினமாகவும் உள்ளது.

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவா்களது தியாகத்துக்கு தலைவணங்குகிறேன் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.