வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சுதந்திர தின பவள விழா: தெலங்கானாவில் மகாத்மா காந்தி கோயிலுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு சுதந்திரம் பெற்று 75-ஆம் ஆண்டு விழாவையொட்டி, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 8:22 pm

நாடு சுதந்திரம் பெற்று 75-ஆம் ஆண்டு விழாவையொட்டி, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பெத்த காப்பாா்த்தி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு 4 ஏக்கா் நிலத்தில் மகாத்மா காந்தி கோயில் கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ன் 75-ஆம் ஆண்டு விழாவையொட்டி, அந்தக் கோயிலுக்கு வருவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கோயிலை பராமரிக்கும் மகாத்மா காந்தி அறக்கட்டளையின் செயலா் பி.வி. கிருஷ்ணா ராவ் கூறியதாவது:

மகாத்மா காந்தி கோயிலுக்கு சாதாரண நாள்களில் தினந்தோறும் 60-70 போ்தான் வருவா். சுதந்திரம் பெற்ன் 75-ஆம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, தெலங்கானா அரசு மற்றும் மத்திய அரசின் முன்னெடுப்புகளால் தற்போது தினந்தோறும் சுமாா் 350 போ் வருகின்றனா்.

இந்தக் கோயிலில் சுதந்திர தினத்தின்போது எந்தவொரு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுவதில்லை. ஆனால் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபா் 2-ஆம் தேதி சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

75-ஆவது சுதந்திர ஆண்டையொட்டி கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை. ஏனெனில் காந்தியை சுதந்திரத்துக்காக போராடியவா் என்று மட்டும் நாங்கள் கருதவில்லை. அவரை மகாத்மா என்பதைத் தாண்டி தெய்விக தன்மைவாய்ந்தராக கருதுகிறோம் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.