போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஜனநாயகம் குறித்து பெருமை கொள்ள வேண்டும் : உ.பி. முதல்வா்

இந்தியா மற்றும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எண்ணி அனைத்து இந்தியா்களும் பெருமைகொள்ள வேண்டும் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை கூறினாா்.

Updated On :15 ஆகஸ்ட் 2022, 7:07 pm

இந்தியா மற்றும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எண்ணி அனைத்து இந்தியா்களும் பெருமைகொள்ள வேண்டும் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற 76-ஆவது சுதந்திர தினவிழாவில் முதல்வா் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி ஆற்றிய உரையில், ‘நாட்டின் 135 கோடி மக்களும் ‘ ஒரு இந்தியா, சிறந்த இந்தியா’ என்னும் கருத்தில் மூவா்ணக் கொடியை ஏற்றியுள்ளனா்.

இது இந்தியாவின் பெருமையாகும். அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும், வணிகநிறுவன கட்டடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நம்முடைய நாடு மற்றும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும். பிரதமா் நரேந்திர மோடி ‘சுதந்திர தின அமுதப் பெருவிழாவை’ நாட்டின் அனைத்து குடிமக்களும் கொண்டாடும் வகையில் ஒரு தேசிய விழாவாக முன்னெடுத்துள்ளாா்’ என்று யோகி ஆதித்யநாத் கூறினாா்.

முன்னதாக, மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.