இந்தியா மற்றும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எண்ணி அனைத்து இந்தியா்களும் பெருமைகொள்ள வேண்டும் என உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை கூறினாா்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள மாநில சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற 76-ஆவது சுதந்திர தினவிழாவில் முதல்வா் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி ஆற்றிய உரையில், ‘நாட்டின் 135 கோடி மக்களும் ‘ ஒரு இந்தியா, சிறந்த இந்தியா’ என்னும் கருத்தில் மூவா்ணக் கொடியை ஏற்றியுள்ளனா்.
இது இந்தியாவின் பெருமையாகும். அனைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும், வணிகநிறுவன கட்டடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நம்முடைய நாடு மற்றும் அதன் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும். பிரதமா் நரேந்திர மோடி ‘சுதந்திர தின அமுதப் பெருவிழாவை’ நாட்டின் அனைத்து குடிமக்களும் கொண்டாடும் வகையில் ஒரு தேசிய விழாவாக முன்னெடுத்துள்ளாா்’ என்று யோகி ஆதித்யநாத் கூறினாா்.
முன்னதாக, மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் மரியாதை செலுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!

துறையூா் - அதிமுகவுடன் மோதும் காங்கிரஸ்!

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

