வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

எல்லையில் இனிப்புப் பரிமாறிக் கொண்ட இந்தியா - பாக். வீரர்கள்

சுதந்திர நாளையொட்டி சர்வதேச எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2022, 6:03 am

DIN

சுதந்திர நாளையொட்டி சர்வதேச எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தில்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ். புரா சர்வதேச எல்லையில் இன்று காலை எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

அதேபோல், அட்டாரி - வாகா எல்லை உள்பட பிற சர்வதேச எல்லைகளிலும் இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.