தில்லியின் பள்ளி மாடலை பின்பற்ற விரும்பும் பிகார் அமைச்சர்: கேஜரிவால் வரவேற்பு

தில்லியின் பள்ளி மாதிரியைப் பின்பற்ற விரும்பும் பிகாரின் கல்வி அமைச்சர் சந்திரசேகருக்கு வரவேற்பு அளித்துள்ளார் முதல்வர் கேஜரிவால். 
தில்லியின் பள்ளி மாடலை பின்பற்ற விரும்பும் பிகார் அமைச்சர்: கேஜரிவால் வரவேற்பு
Published on
Updated on
1 min read

தில்லியின் பள்ளி மாதிரியைப் பின்பற்ற விரும்பும் பிகாரின் கல்வி அமைச்சர் சந்திரசேகருக்கு வரவேற்பு அளித்துள்ளார் முதல்வர் கேஜரிவால். 

பிகார் மாநிலத்தில் பள்ளிக் கல்வி முறையை முழுவதுமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள, கல்வி அமைச்சர் சந்திரசேகர், தில்லி மற்றும் பிற மாநிலங்களுக்கு கல்வி மாதிரிகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பும் என்று புதன்கிழமை தெரிவித்தார். 

தேசிய தலைநகரில் அரவிந்த் கேஜரிவால் அரசின் கல்வி மாதிரியை மக்கள் பாராட்டுகிறார்கள். 

பிகார் கல்வி அமைச்சர் தனது குழுவை தில்லி பள்ளி மாதிரியை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டுவது குறித்த செய்திக்கு கேஜரிவால் பதிலளித்துள்ளார். 

தேசிய தலைநகருக்கு பிகார் கல்வி அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வருகை தரும்போது தில்லி அரசு தனது பள்ளி மாதிரியை மகிழ்ச்சியாகக் காண்பிக்கும். 

சந்திரசேகர் ஜி மற்றும் அவரது குழுவினர் தில்லி அரசுப் பள்ளிகளுக்கு வரவேற்கப்படுகிறார்கள் என்று இந்தியில் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

அரசாங்கங்கள் இப்படி ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டால் நாடு முன்னேறும். 

இந்தியாவை உலகின் முதல் நாடாக மாற்ற, நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை நாம் ஒன்றாக வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com