தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

திகார் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: ஒருவர் பலி

திகார் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 வயது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2022, 10:10 am

DIN

திகார் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 வயது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஆகஸ்ட் 22-ம் தேதி திகார் மத்தியச் சிறை எண் 5ல் உள்ள கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது. 

கைதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டதில், கைதி சமீர் கானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திடீரென அவர் சரிந்து விழுந்தார். 

உடனே அவர் சிறை மருந்தகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் டிடியூ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இவர்களின் மோதல் காட்சி அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. 

உயிரிழந்த 20 வயதான சமீர் பலாஸ்வா பால் பண்ணை பகுதியில் வசிப்பவர். அவர் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மெட்ரோபாலிட்டன் நீதிபதியால் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.