தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

காதலியை சந்திக்கச் சென்ற இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்!

உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியைச் சந்திக்கச் சென்றபோது குடும்பத்தினரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 12:07 pm IST

ரேபரேலி: உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலியைச் சந்திக்கச் சென்றபோது குடும்பத்தினரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சரேணி காவல்துறை வட்டத்திற்குள்பட்ட மசாபூர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

செவ்வாயன்று இரவு அங்கீத் தனது காதலியைச் சந்திக்கச் சென்றுள்ளார். இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அங்கீத்தை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். 

குடும்பத்தினர் மற்ற உறவினர்களை அழைத்தனர். அவர்கள் அனைவரும் இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அவன் அலற ஆரம்பித்தவுடன், அவர்கள் தங்கள் வீட்டை விட்டு அங்கீத்தை வெளியேற்றிவிட்டு, பாதிக்கப்பட்டவர் தங்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டைத் தாக்கியதாகக் கூச்சலிடத் தொடங்கினர். 

அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவர்கள் 
அங்கித்தை அருகிலுள்ள மிஸ்ரா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கீத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காதலித்த பெண்ணும், இளைஞரும் ஒரே கிராமத்தில் வசிப்பவர்கள் என்று தெரிய வந்தது. 

முதற்கட்ட விசாரணையில் இந்த வழக்கில் மேலும் சில தடயங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.