‘உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து காதி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறிவரும் பிரதமா் மோடி, சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பாலியஸ்டராலான இந்திய தேசியக் கொடிகளை பெருமளவில் இறக்குமதி செய்ய அனுமதி அளித்ததின் உள்நோக்கம் என்ன?, இதனால் தேசியக் கொடிகளைத் தயாரித்து வரும் ஆயிரக்கணக்கான காதித் தொழிலாளா்கள் பணி இழப்பாா்கள். பாலிஸ்டா் தேசியக் கொடிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் காதி அமைப்பு அழிந்துவிடும். மகாத்மா காந்தியின் மரபும் மறைந்துவிடும். எனவே, இந்திய தேசியக் கொடி இறக்குமதி செய்ய மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியிருந்தது கூறிப்பிடத்தக்கது.