
பாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்கள் வெடித்தன. அவற்றில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
குறிப்பாக, மும்பை போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடந்தது.
இதையும் படிக்க: தேசிய கல்விக் கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம்: மு.க. ஸ்டாலின்
பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அச்சம்பவம் தொடர்பாக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
மசூதி இடிப்பிற்குப் பின் எழுந்த வன்முறைப் போராட்டங்கள், தாக்குதல்கள் போன்ற பல்வேறு வழக்குகளில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.