திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

பாபர் மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு

பாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 10:11 am

DIN

பாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு, டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்கள் வெடித்தன. அவற்றில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக, மும்பை போன்ற நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் நடந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அச்சம்பவம் தொடர்பாக அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் நீதிமன்ற அவமதிப்பு  வழக்குகள் அனைத்தும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பின்போது...

பாபர் மசூதி இடிப்பின்போது...

மசூதி இடிப்பிற்குப் பின் எழுந்த வன்முறைப் போராட்டங்கள், தாக்குதல்கள் போன்ற  பல்வேறு வழக்குகளில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.