நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

எய்ம்ஸ் போல.. ஐசிஎம்ஆர் இணையதளத்தை 6,000 முறை முடக்க முயன்ற ஹேக்கர்கள்!

ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க ஒரே நாளில் 6 ஆயிரம் முறை சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முயற்சித்துள்ளனர். 

News image
Updated On :6 டிசம்பர் 2022, 9:49 pm IST

ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க ஒரே நாளில் 6 ஆயிரம் முறை சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முயற்சித்துள்ளனர். 

கடந்த சில நாள்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளத்தை ஹேக்கர்கள் முடக்கி பணம் கொடுக்க வலியுறுத்திய நிலையில், தற்போது 
ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க ஹேக்கர்கள் முயற்சி செய்துள்ளனர். 

எனினும், ஐசிஎம்ஆர் இணையதளம் மேம்பட்ட ஃபையர்வால்களைக் கொண்டுள்ளதால், எளிதில் முடக்க இயலாது என ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை முடக்கி,  ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரினர். அதனைத் தொடர்ந்து தற்போது ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க ஹேக்கர்கள் முயற்சி செய்துள்ளனர். 

நவம்பர் 30ஆம் தேதி மட்டும் ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க 6000 முறை ஹேக்கர்கள் முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கை சேர்ந்தவர்கள் என்றும் அரசுத் துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

எனினும் ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்கும் ஹேக்கர்களின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேம்பட்ட ஃபையர்வால்களைக் கொண்டுள்ளதால்  ஐசிஎம்ஆர் இணையதளத்தை முடக்க இயலாது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

ஐசிஎம்ஆர் இணையதளம் பாதுகாப்பாக உள்ளதாகவும், இணையவழித் தாக்குதல் தடுக்கப்பட்டதாகவும் அரசுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.