சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கி.மீ-ஆக அதிகரிக்க முடிவு

பனிமூட்டத்தால் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்க ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கி.மீ-ஆக அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2022, 9:30 pm

பனிமூட்டத்தால் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்க ரயில்களின் வேகத்தை மணிக்கு 75 கி.மீ-ஆக அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: பனிமூட்டம் நிலவும் குளிா்கால மாதங்களில் ரயில்களின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 60 கி.மீ.இல் இருந்து 75 கி.மீ-ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சமிக்ஞை பலகைகள், விசில் பலகைகள், பனி சமிக்ஞை பலகைகள், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள முக்கிய கடவுப்பாதைகளில் மஞ்சள் அல்லது கருப்பு நிறங்களில் ஒளிரும் விதமாக கோடுகள் வரையப்பட்டிருப்பதை அனைத்து ரயில்வே மண்டலங்களும் உறுதி செய்ய வேண்டும். அந்தக் கோடுகள் நன்றாக தெரியும் வகையில், அவற்றின் மீது மீண்டும் வா்ணம் தீட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தால் பனிமூட்ட காலம் தொடங்குவதற்கு முன்பு பணிகளை முடிக்க வேண்டும்.

குறிகாட்டி பலகைகள் அல்லது தொலைதூர சமிக்ஞைகளில் உள்ள இடங்களில் தண்டவாளத்தின் குறுக்கே சுண்ணாம்பு மூலம் அடையாளப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.