மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மனைவியைக் கொன்றதாக பல காலமாக சிறையில் இருந்தவர்; இறுதியில் தெரிய வந்த உண்மை

மனைவியைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட பல ஆண்டு காலமாக சிறையில் கணவர் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவி உயிரோடு இருப்பது தெரிய வந்துள்ளது.

News image

மனைவியைக் கொன்றதாக பல காலமாக சிறையில் இருந்தவர்; இறுதியில் தெரிய வந்த உண்மை

Updated On :13 டிசம்பர் 2022, 9:16 am


டௌஸா: ராஜஸ்தான் மாநிலத்தில், மனைவியைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட பல ஆண்டு காலமாக சிறையில் கணவர் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனைவி உயிரோடு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மெஹந்திபூர் பாலாஜி காவல்நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட பெண் தான், 7 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டு, அந்த வழக்கில் கணவர் உள்பட 2 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள்தான், அப்பெண் இருக்கும் இடம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில், காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி கூறுகையில், பாதிக்கப்பட்ட சோனு  கடந்த 2015-ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பிறகு, சோனு பெயரில் இருந்த நிலம் மற்றும் சொத்துகளை தன் பெயரில் மாற்றித் தருமாறு ஆர்த்தி கோரியுள்ளார். அவ்வாறு செய்ய சோனு மறுத்ததால், அவர் காணாமல் போனார், அதன் பிறகு, ஆர்த்தியை பல இடங்களிலும் தேடினார்கள். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, மதுரா அருகே கால்வாய் ஒன்றில், பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது. உடல் கூறாய்வு செய்யப்படாமலேயே, அப்பெண்ணின் சடலம் எரியூட்டப்பட்டது.

6 மாதங்களுக்குப் பின், ஆர்த்தியின் தந்தை காவல்நிலையம் வந்து தனது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்தார். இதையடுத்து, எரியூட்டப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைக் காட்டியதும், அது தனது மகள் ஆர்த்தி என்று தந்தை அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து, ஆர்த்தியின் கணவர் சோனு மீது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சோனு மற்றும் அவரது நண்பரைக் கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.

பிணையில் வெளியே வந்த சோனுவும், அவரது நண்பரும் ஆர்த்தி இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து காவல்நிலையத்தில் தெரிவித்ததையடுத்து, ஆர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். 

விரைவில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று சோனுவும் நண்பரும் காத்திருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.