பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.
பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய 2016, செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஒப்பந்தம் செய்தது.
அதன்படி முதல்கட்டமாக கடந்த 2020 ஜூலை மாதம் முதல் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன. ரஃபேல் போர் விமானங்கள் விமானப்படையுடன் சேர்க்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டன.
அந்த வகையில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில், கடைசி மற்றும் 36 ஆவது ரஃபேல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.
இதையும் படிக்க | எஸ்பிஐ வீட்டுக்கடன் வாங்கியுள்ளீர்களா? இன்று முதல் வட்டி உயர்கிறது!
பிரான்ஸில் இருந்து புறப்பட்டு பின்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பிய பின்னர் இன்று பிற்பகல் இந்தியா வந்தடைந்தது.