ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை திறப்பு!

ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சிலை திறப்பு!

ஐ.நா. தலைமையகத்தில் முதல் முறையாக காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அந்தக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் சுழற்சி முறையில் ஏற்கும். இதன் தொடா்ச்சியாக டிசம்பா் மாதத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலை இன்று திறக்கப்பட்டது.

இருநாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அன்டோனியோ குட்டரெஸும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர்.

இந்திய அரசு பரிசாக வழங்கிய இந்த சிலையை, புகழ்பெற்ற இந்திய சிற்பியும், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவருமான ராம் சுதாா் வடிவமைத்ததாகும்.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

11-ஆம் நூற்றாண்டு சிலை பரிசு

ஏற்கெனவே கடந்த 1982-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்தியா சாா்பில் ஐ.நா.வுக்கு சூா்ய பகவான் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. அது பாலப் பேரரசு கால 11-ஆம் நூற்றாண்டு கருங்கல் சிலையாகும். அதனை முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பரிசாக அளித்தாா். அந்த சிலை ஐ.நா. மாநாட்டு கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைதான் ஐ.நா.வுக்கு இந்தியா அளித்த முதல் பரிசு.

தற்போது ஐ.நா.வில் திறக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலை இந்தியாவின் 2-ஆவது பரிசாகும். அந்த சிலை திறக்கப்பட்டுள்ள ஐ.நா. தலைமையகப் புல்வெளிப் பகுதியில் 1961 முதல் 1989-ஆம் ஆண்டு வரை ஜொ்மனியை பிரித்த பொ்லின் சுவரின் பகுதிகள், தென் ஆப்பிரிக்கா பரிசாக அளித்த நெல்சன் மண்டேலா சிலை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com