எங்களுக்கு அதிகாரமே இல்லை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்து கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி போராடும் போராட்டக்குழுவினர் வெள்ளிக்கிழமை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்த பிறகு நமக்கு மரியாதையே இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. அரசு ஊழியர்கள் சம்பந்தமாக நிறைவேற்ற விரும்புகிற திட்டங்களைக் கூட நிறைவேற்ற முடியவில்லை. திட்டத்தை செய்யக் கூடாது என்பதற்காக உடனடியாக அறிவிப்பாணைகள் வெளியிடப்படுகின்றன. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துதான் தீர்வு” எனத் தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் சமீப காலங்களில் புதுவை முதல்வர் தெரிவிக்கும் கருத்துகள் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை என்பது என்ன ?
பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!

300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!

ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல: மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



