

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவின் தனிப்பட்ட கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
மாநில பாஜக தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி வெள்ளிக்கிழமை மாலை மோடிக்கு எதிரான பூட்டோவின் அறிக்கை "அநாகரீகமானது" மற்றும் "வெட்கக்கேடானது" என்று தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி சார்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மதுராவில் வெள்ளிக்கிழமை பாஜவினர் போராட்டம் நடத்தி பாகிஸ்தான் அமைச்சரின் உருவ பொம்மையை எரித்தனர்.
மாநில பாஜக பொதுச் செயலாளர் கோவிந்த் நாராயண் சுக்லா கூறுகையில்,
தலைநகர் லக்னௌவில் மதியம் 12 மணியளவில் கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள்.
பிரதமர் மோடியின் தலைமையில் முழு உலகிலும் வலிமையான நாடாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் அறிக்கை, அவரது விரக்தியையும் ஏமாற்றத்தையும் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.