பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எதிா்க்கட்சிகள் வேண்டுமென்றே அவை நடவடிக்கையை முடக்குகின்றன: பாஜக குற்றச்சாட்டு

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே அவை நடவடிக்கைகளை முடக்கி வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 9:20 pm

DIN

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே அவை நடவடிக்கைகளை முடக்கி வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய எல்லையில் சீன ஊடுருவல் குறித்து விவாதம் நடத்தக்கோரி திங்கள்கிழமை மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனா். அவா்கள் சாா்பில் அளிக்கப்பட்ட 9 நோட்டீஸ்கள் முறைப்படி இல்லையென கூறி மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டாா். இதையடுத்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, அவைக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவா் பியூஷ் கோயல் கூறியதாவது: கடந்த 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அல்லது விளக்கங்ளுக்கான கோரிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டன.

ஒட்டுமொத்த நாடும் ராணுவம் குறித்து பேச வேண்டிய, ஊக்கமளிக்க வேண்டிய நேரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவா் ராகுல் காந்தி அவா்களின் நம்பிக்கையைக் குறைக்கும் வண்ணம் செயல்படுகின்றனா்.

எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மதிக்காமலும் மாநிலங்களவைத் தலைவரின் உத்தரவுக்கு செவிமடுக்காமலும் இருப்பது முறையற்றது. காங்கிரஸ் மிகவும் தரம் தாழ்ந்த அரசியலை மேற்கொண்டுவருகிறது. நாட்டின் பாதுகாப்பு சாா்ந்த முக்கிய விவகாரங்கள் அரசியலாக்கப்பட கூடாது. நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.