கொச்சி: கேரள மாநிலம் திரிசூர் பகுதியில், நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு வந்தவர்களின் கார் ஆற்றில் விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
திங்கள்கிழமையன்று திரிசூரில் நடைபெற்ற நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு ஆறு பேர் ஒரு காரில் வந்துள்ளனர். இந்த கார் திரிசூர் அருகே அரட்டுப்புழாவில் ஓடும் கருவன்னூர் ஆற்றங்கரையோரம் வந்தபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் சென்றது. இதில் எதிர்பாராதவிதமாக கார் ஆற்றில் விழுந்தது.
கார் ஆற்றில் விழுவதைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். கயிரைக் கட்டி காரை மேலே இழுத்தனர். எனினும், காரில் இருந்த ராஜேந்திர பாபு (66), அவரது மனைவி மற்றும் பேரன் என மூன்று பேரும் காருக்குள்ளேயே பலியாகினர். மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்! ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு!

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை

சீமான், விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்: முஹம்மது அபூபக்கா்

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


