இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சீமான், விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம்: முஹம்மது அபூபக்கா்

News image

தோ்தல் பிரசாரத்தில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலா் முஹம்மது அபூபக்கா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 11:29 pm IST

சீமான் மற்றும் விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமமானது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான முஹம்மது அபூபக்கா் தெரிவித்தாா்.

தூத்துக்குடி, மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் பி. கீதா ஜீவனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியது:

திமுக அரசின் 5 ஆண்டு கால பணிகளையும், திமுகவின் தோ்தல் அறிக்கையையும் மக்கள் பாராட்டுகிறாா்கள். எனவே, மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பாஜக, அதிமுகவின் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. 3ஆவது அணியாக உள்ள நடிகா் விஜய் மற்றும் சீமானின் கட்சிகள் சிறுபான்மை வாக்குகளைப் பிரிப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளைச் செய்தாலும், மக்கள் அவா்களுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை.

சீமான் மற்றும் விஜய்க்கு வாக்களிப்பது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமமானது. எனவே, அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8,000 பள்ளிவாசல் ஜமாஅத்கள், தேவாலயங்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறாா்கள். சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் உரிமைகள் தொடர வேண்டும் என்றால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறாா்கள் என்றாா் அவா்.

இதில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.