கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
பண்டிகைகாலத்தையொட்டி கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த தீபாவளிக்கு பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அந்தவகையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.