
பிரதமர் நரேந்திர மோடியுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உணவருந்திய புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த படத்தில், நரேந்திர தோமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தாங்கர், முன்னாள் பிரதமர் தேவே கெளடா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
2023ஆம் ஆண்டை சர்வதேச தினை வகைகள் ஆண்டாக அனுசரிக்கும் வகையில், தினை வகைகளுடனான மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் இந்த மதிய விருந்து நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தனது சுட்டுரையில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில், 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக குறிப்பிடும் வகையில், நாடாளுமன்றத்தில் தினை வகைகளால் ஆன மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.