மகாராஷ்டிரத்தில் ஊராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், தான் தோற்றுப்போனதால் அந்த ஊராட்சி மக்களை கத்தியை வைத்து மிரட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தின் அகோலா மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அகோலா மாவட்டத்தின் காம்கேத் கிராமத்தில் ஒருவர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு கிராம மக்களை அச்சுறுத்தி வரும் விடியோ நேற்று (டிசம்பர் 24) சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிராம மக்களை கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டி வந்த அந்த நபர் அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆனால், அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்ததால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவர் கிராம மக்களை பார்த்து தொடர்ந்து தகாத முறையில் திட்டி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் கையில் ஒரு கத்தியை வைத்துக் கொண்டு கிராம மக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகின்றனர். அதனால், அவரது இந்தத் தோல்வி அவரை பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆயுதத்துடன் மக்களை அச்சுறுத்தி வந்த அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனிக்கு மொட்டை போட்டது யார் என்று காலப்போக்கில் தெரியும்! அமைச்சர் செங்கோட்டையன்

விஷ்ணு விஷால் பிறந்த நாள்... இரண்டு வானம் சிறப்பு போஸ்டர்!

குவைத்தின் நீர் சுத்திகரிப்பு மற்றும் மின்சார நிலையம் மீது ஈரான் கடும் தாக்குதல்!

பழனி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கு: சார் - பதிவாளருக்கு முன்ஜாமின்!
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



