சா்வதேச அளவில் சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க முடியாவிட்டால் ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை’ கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா அண்மையில் கடிதம் எழுதினாா். ஆனால், திட்டமிட்டபடி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீா் வரை நடைபெறும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தாா். இதனை பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.