மூவருக்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில், மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவா்கள் புதன்கிழமை மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கில் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், மூவரின் சிபிஐ காவலை 2 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு வழக்குரைஞா் கோரிக்கை விடுத்தாா். இதற்கு, குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.மென்ஜாஜ், மூவரின் சிபிஐ காவலையும் வியாழக்கிழமை வரை (டிச. 29) நீட்டித்து உத்தரவிட்டாா்.