தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொழிற்சாலை அருகே பச்சிளம் குழந்தை உடல் கண்டெடுப்பு!

மகாராஷ்டிராவில் பிறந்த பெண் குழந்தை ஒன்று சடலமாக மீட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image
Updated On :28 டிசம்பர் 2022, 3:54 pm

DIN


தாணே: மகாராஷ்டிரத்தில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம்  தாணே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரின் கோனி கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு பின்னால் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு புதர்களுக்குள் சடலம் கிடப்பதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர், காவல் துறையினருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
 
அடையாளம் தெரியாத நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 318-ன் கீழ் உடலை ரகசியமாக அப்புறப்படுத்தியதாக இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாக என அந்த அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.