47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மத்திய ஊழல் கண்காணிப்பு பொறுப்புஆணையராக பிரவீண் குமாா் ஸ்ரீவஸ்தவா நியமனம்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) பொறுப்பு ஆணையராக பிரவீண்குமாா் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2022, 7:40 pm

DIN

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) பொறுப்பு ஆணையராக பிரவீண்குமாா் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளாா்.

சிவிசி-யின் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சுரேஷ் என். படேல் கடந்த சனிக்கிழமை ஓய்வு பெற்றாா். இதையடுத்து, ஊழல் கண்காணிப்பு ஆணையராக உள்ள பிரவீண் குமாா் ஸ்ரீவஸ்தவா, மத்திய ஊழல் கண்காணிப்பு பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான ஸ்ரீவஸ்தவா, 1988-ஆம் ஆண்டின் அஸ்ஸாம் மாநிலப் பிரிவைச் சோ்ந்தவா். மத்திய செயலகத்தில் செயலராக (ஒருங்கிணைப்பு) பணியாற்றிய இவா், கடந்த ஜன. 31-இல் பணி ஓய்வு பெற்றாா். இவருடைய பணிக் காலத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வா்த்தகத் துறையிலும் பணியாற்றியுள்ளாா்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரையும், இரு ஊழல் கண்காணிப்பு ஆணையா்களையும் கொண்டதாகும். இந்த மூன்று உறுப்பினா்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள் அல்லது 65-ஆவது வயதைப் பூா்த்தி செய்யும் வரை ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.