போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

3 கோடி பயணிகளின் தகவல்கள் விற்பனைக்கு: மறுக்கும் ரயில்வே

இந்திய ரயில்வேயின் பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹேக்கர்கள் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.

News image
3 கோடி பயணிகளின் தகவல்கள் விற்பனைக்கு: மறுக்கும் ரயில்வே
Updated On :29 டிசம்பர் 2022, 12:25 pm

DIN

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹேக்கர்கள் விளம்பரம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், அவ்வாறு பயணிகளின் தகவல்கள் திருடப்படவேயில்லை என்று இந்திய ரயில்வே மறுத்துள்ளது.

ஹேக்கர்களுக்கான இருண்ட இணையதளப் பக்கங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஐஆர்சிடிசி அமைப்பிலும்  சரி, சர்வர்களிலும் அப்படி ஒரு ஊடுருவல் நடைபெறவேயில்லை என்கிறது இந்திய ரயில்வே. 

இது இப்படியிருக்க, ஐஆர்சிடிசி, தனது வணிக கூட்டாளிகளை அனைவரையும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும். அதன் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளது. 

ஹேக்கர்களிடமிருந்து கிடைத்திருக்கும் சில தகவல்களை பரிசோதனைக்கு உள்படுத்தியபோது, அதன் பேட்டர்ன், ஐஆர்சிடிசி தகவல் பதிவு அமைப்பின் பேட்டர்னுடன் ஒத்துப்போகவில்லை என்பது ரயில்வேயின் கூற்று. 

எனவே, விற்பனைக்கு வந்திருக்கும் தகவல்கள் இந்திய ரயில் பயணிகளுடையது அல்ல என்பதும், ஐஆர்சிடிசி சர்வர்களில் எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என்பதும் ரயில்வே அமைச்சக பேச்சாளரால் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.