உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புடாவுன் தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஸ்மிருதி ராணி, தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் பெயர்கள் உ.பி. தேர்தல் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அமித் ஷா ஆகியோர் அங்கு தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புடாவுன்(Budaun) தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து அட்ராலி(Atrauli) பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.