சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விடாது துரத்தும் இருமல்? அலட்சியம் வேண்டாம்

பேசினாலே இருமல், திடீரென பயங்கர இருமல் என இருமலில் எத்தனை ரகம் உண்டோ அத்தனையும் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளாக இன்னமும் உள்ளன.

News image

கரோனாவிலிருந்து மீண்ட பிறகும் விடாது துரத்தும் இருமல்? அலட்சியம் வேண்டாம்

Updated On :2 பிப்ரவரி 2022, 4:50 pm IST


ஹைதராபாத்: பேசினாலே இருமல், திடீரென பயங்கர இருமல் என இருமலில் எத்தனை ரகம் உண்டோ அத்தனையும் கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகளாக இன்னமும் உள்ளன.

கரோனாவிலிருந்து மீண்ட ஏராளமானோர் கூறுவது என்னவென்றால், கரோனாவிலிருந்து மீண்டு ஒரு சில வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், வறட்டு இருமலும், தொடர் இருமலும் இன்னமும் விடவில்லை என்கிறார்கள்.

கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் பலருக்கும் இருமல் இருக்கிறது. ஆனாலும் அதனை அலட்சியம் செய்ய வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதாவது, மருத்துவக் கூற்றுப்படி, எந்த ஒரு இருமலும் 10 - 14 நாள்களுக்கு மேலும் நீடித்தால், நிச்சயம் மருத்துவரை நாட வேண்டும். வறட்டு இருமல் என்பது, உடலில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு அல்லது வைரஸால் தொண்டையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உருவாகலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கேர் மருத்துவமனை மருத்துவர் நவோதயா கில்லா இது பற்றி கூறுகையில், தொடர் மற்றும் கடுமையான இருமலுக்கு இருமல் மருந்துகளும், சுடு தண்ணீர் அல்லது வீட்டு வைத்தியங்களே பலனளிக்கும்.

பொதுவாக ஏதேனும் தொற்று பாதிக்கும்போது அதனால் நோய் எதிர்பாற்றல் குறையும் போது மற்றொரு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 14 நாள்களுக்கும் மேல் தொடர்ந்து இருமல் இருந்தால் மருத்துவரை நாட வேண்டும். அலட்சியம் வேண்டாம் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.