இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைகள் மீது தாக்குதல்: 4 பயங்கரவாதிகள், 1 ராணுவ வீரர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 4 பயங்கரவாதிகள், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :3 பிப்ரவரி 2022, 5:56 am

DIN

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் 2 பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 4 பயங்கரவாதிகள், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர்.

பஞ்ச்கூர் மற்றும் நோஷ்கி ஆகிய மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவத்தால் புதனன்று தாக்குதல் நடத்தப்பட்டன. பஞ்ச்கூரில் பயங்கரவாதிகள் 2 இடங்களிலிருந்து பாதுகாப்புப் படைகளின் முகாமுக்குள் நுழைய முயன்றர். அதேநேரத்தில் நோஷ்கியில் எல்லைப் படை முகாமுக்குள் நுழைய முயன்றுள்ளனர். 

இந்த இரு தாக்குதல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இதில் நான்கு பயங்கரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு அதிகாரி காயமடைந்தார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.