ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.7-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

News image
ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்
Updated On :5 பிப்ரவரி 2022, 6:31 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.7-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் பூமிக்கு அடியில் 181 கி.மீ. ஆழத்தில் காலை 9.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் அதிா்வுகள் ஜம்மு-காஷ்மீா் முழுவதும் நன்கு உணரப்பட்டன. வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்டு வெளியேறி வெட்டவெளிப் பகுதியில் தஞ்சமடைந்தனா். எனினும், இந்த நிலடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆளுநரிடம் கேட்டறிந்த பிரதமா்: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவை பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது நிலநடுக்கத்தை அடுத்து ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.