டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், வழக்கம் போல குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் பட்டியல் நீள்கிறது.
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உத்தரக்கண்ட் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பெரிய கட்சிகள் அனைத்துமே, தங்கள் மீது குற்றப் பின்னணி இருக்கிறது என்று தெரிவித்திருக்கும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு 17 முதல் 33 சதவீத வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகள், தாங்கள் ஏன் இந்த குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளரை தேர்வு செய்தோம், குற்றப் பின்னணி இல்லாத நபர்களை தேர்வு செய்யாதது ஏன் என்று கட்சிகள் வேட்பாளர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்கியிருக்கும் நிலையிலும் கூட, பழைய கதையே தொடர்கிறது.
அதாவது, பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 626 வேட்பாளர்களில், 17 சதவீதம் அதாவது 107 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்களில் 61 பேர் மீது மிக மோசமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2017ல் நடந்த பேரவைத் தேர்தலில் 637 வேட்பாளர்களில் 14 சதவீதம் பேர்தான், அதாவது 91 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
இதனால், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 13 தொகுதிகள் பதற்றமான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு தொகுதியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருப்பின், அந்தத் தொகுதி பதற்றமான தொகுதியாக அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


