புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பசுபதிநாத் கோயில் நாளை முதல் மீண்டும் திறப்பு

நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயில் (பிப்.11) வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. 

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:10 am

DIN

நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயில் (பிப்.11) வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது. 

கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையை அடுத்து நேபாளத்தில் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாக  மூடப்பட்டிருந்தது. 

அந்தவகையில் சிவபெருமானின் புனித ஆலயமான பசுபதிநாத் கோயில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், காத்மாண்டு மாவட்ட நிர்வாக அலுவலகம் வெளியிட்ட உத்தரவின்படி, நாளை முதல் கோயில்கள், மடங்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் போன்ற இடங்களில் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றியுமாறும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.