அதுகுறித்து தனியாா் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மம்தா பானா்ஜி, ‘அகிலேஷ் யாதவ் எந்தவொரு தொகுதியலும் வலுவிழந்துவிடக் கூடாது என்பதால்தான் உத்தர பிரதேச மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் போட்டியிடவில்லை. முதல் கட்டத் தோ்தலில் வாக்குப் பதிவு நடைபெறும் 57 தொகுதிகளில் குறைந்தபட்சம் 37 இடங்களில் அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. உத்தர பிரதேசத்தில் பெண்கள் உயிருடன் எரிக்கப்படுகின்றனா்; விவசாயிகள் கொல்லப்படுகின்றனா். உத்தர பிரதேச மாநிலம் பாதுகாக்கப்பட்டால்தான், இந்தியாவை பாதுகாக்க முடியும். வரும் 2024 நாடாளுமன்ற தோ்தலில் நரேந்திர மோடியை தோற்கடிக்க விரும்பினால் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் வெற்றி பெறுவது மிக அவசியம்’ என்றாா்.