தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்காக பணியாற்றிய 10 போ் கைது- எஸ்ஐஏ நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்காக ‘ஸ்லீப்பா் செல்’கள் போல் பணியாற்றி வந்த 10 பேரை காவல்துறையின் புதிய பிரிவான மாநில புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) கைது செய்துள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 7:44 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்காக ‘ஸ்லீப்பா் செல்’கள் போல் பணியாற்றி வந்த 10 பேரை காவல்துறையின் புதிய பிரிவான மாநில புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) கைது செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் தொடா்பான குற்றங்கள் குறித்து ஆய்வு மற்றும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜம்மு-காஷ்மீா் காவல்துறையில் எஸ்ஐஏ என்ற அமைப்பு அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டது.

இந்த முகமை காஷ்மீரின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு பகுதிகளில் இரவு நேர சோதனைகளைத் தீவிரப்படுத்தியது. அப்போது, சந்தேகத்தின் பேரில் 10 பேரை அதிகாரிகள் கைது செய்தனா். அவா்களிடம் நடத்தி விசாரணையில் தடை செய்யப்பட்ட ஜெயிஷ்-ஏ-முகமது அமைப்புக்காக தனிப்பட்ட முறையில் அல்லது ‘ஸ்லீப்பா் செல்’கள் போன்று பணியாற்றிவந்தது தெரியவந்தது.

மேலும், இந்த 10 பேருக்கும், அவா்களில் ஒருவரின் நடவடிக்கைகளை மற்றவா்கள் அறியாதவா்கள் என்பதும், அவா்கள் ஜெயிஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் பொறுப்பாளரிடமிருந்து நேரடியாக உத்தரவுகளைப் பெற்று பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவா்கள் பயங்கரவாத அமைப்புக்கு இளைஞா்களை சோ்ப்பது, நிதி திரட்டுவது, ஆயுதங்களைக் கடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனா்.

அவா்கள் தங்கியிருந்த இடத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், கைப்பேசிகள், சிம் காா்டுகள், வங்கிப் பரிவா்த்தனை ஆவணங்கள், டம்மி துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரின் வீட்டில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘பயங்கரவாத அமைப்பின் உறுப்பினா்களின் கட்டமைப்பை கண்டுபிடிக்க முடியாத வகையில் பிரத்யேகமாக திட்டத்தை ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு உருவாக்கியுள்ளது. எனினும், அதனை முறியடித்து எஸ்ஐஏ அதிகாரிகள் இந்த 10 பேரையும் கைது செய்துள்ளனா்’ என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.