ஒடிசா, ஆந்திரப் பிரதேச ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஒடிசா மாநிலம், புரியில் கௌடியா மடத்தையும், இயக்கத்தையும் நிறுவிய ஸ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்-ன் 150-வது பிறந்த ஆண்டின் 3 ஆண்டு கால கொண்டாட்டங்களை பிப்ரவரி 20ஆம் தேதி அவர் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து பிப்ரவரி 21ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் கப்பல் படை போர் விமானத்தை ஆய்வு செய்யும் குடியரசுத் தலைவர் அணிவகுப்பையும் பார்வையிடுகிறார்.
கப்பல் படை போர் விமானத்தை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முப்படைகளின் உயர்நிலைத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவரின் பதவிக்காலத்தில் ஒரு முறை இந்திய கப்பல் படையின் போர் விமானத்தை அவர் ஆய்வு செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.