பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாளை முதல் பிப்.22 வரை ஒடிசா, ஆந்திரம் மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் பயணம்

ஒடிசா, ஆந்திரப் பிரதேச ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 4:13 pm

DIN

ஒடிசா, ஆந்திரப் பிரதேச ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஒடிசா மாநிலம், புரியில் கௌடியா மடத்தையும், இயக்கத்தையும் நிறுவிய ஸ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்-ன் 150-வது பிறந்த ஆண்டின் 3 ஆண்டு கால கொண்டாட்டங்களை பிப்ரவரி 20ஆம் தேதி அவர் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து பிப்ரவரி 21ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் கப்பல் படை போர் விமானத்தை ஆய்வு செய்யும் குடியரசுத் தலைவர் அணிவகுப்பையும் பார்வையிடுகிறார். 

கப்பல் படை போர் விமானத்தை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முப்படைகளின் உயர்நிலைத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவரின் பதவிக்காலத்தில் ஒரு முறை இந்திய கப்பல் படையின் போர் விமானத்தை அவர் ஆய்வு செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.