பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரேகட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 63.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | தாக்கரேவை சந்தித்த கேசிஆர்...பாஜகவுக்கு எதிராக அணி அமைக்க திட்டம்
பஞ்சாபில் காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே பலமுனைப் போட்டி நிலவுகிறது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் மாலை 5 மணி வரை 57.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.